Friday, 8 May 2020

Navapashana Murugan Temple - Hasthinapuram, Chromepet, Chennai

Location
17, N Mosque St, Maruthi Nagar, Hasthinapuram, Chromepet, Chennai, Tamil Nadu 600064

History
Built by Sri Vadapalani Siddhar in 1991.

Sri Navabasana Raja Murugan Temple -NORTH MALYAMBAKKAM, Chennai

 24-25A, SRD ROYAL CITY ANNEX, Navapashana Murugan Kovil Street, NORTH MALYAMBAKKAM, Chennai, Tamil Nadu 600123

நவபாஷாணம் என்றால் நம் நினைவுக்கு வருவது தென் பழனி, தமிழகத்திலேயே பழநியில் மட்டும் தான் நவபாஷாணத்தில் செய்த முருகன் சிலை உள்ளது. இதன் மீது செய்யப்படும் அபிஷேக பொருட்கள் மருந்தாகி நாள்பட்ட வியாதிகளையும் குணமாக்கும் என்பதையும் இதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போகர் சித்தர் செய்தார் எனத் தெரியும். பழநியில் போகர் செய்த ஒன்பது நவபாஷாணங்களை கட்டி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் செய்தது போலவே, நமது சென்னை மாநகரின் பூந்தமல்லியை ஒட்டி வடக்கு மலையம்பாக்கத்தில் (என்னூரிலிருந்து வண்டலூர் செல்லும் வழியில்) பைபாஸ் அருகே நவபாஷாண ராஜமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சிறப்பு அதன் ஒன்பது அடுக்கு கோபுரம் ஆகும்.
ஒவ்வொரு அடுக்குகளில் எட்டு திசை காற்றினை 72 துவாரம் வழியாக காற்றின் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகன் சிலை மீது பட்டு அங்கு வரும் பக்தர்களின் மீது படும்படி அமைந்துள்ளது. மேலும் பிரபஞ்ச சக்தியினை பெரும் வகையில் ஆண் மெய்யன்பதிகள் தனது மேல் சட்டை, பனியனையும் கழற்றி அச் சக்தியினை முழுமையாக பெறுகிறார்கள். அடுத்த சிறப்பு இந்த நவபாஷாண சிலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஓசோன் படலம் இதன் மீது படும் நேரம் லண்டன் கீரின்விச் நேரப்படி உலகத்திற்கு சூரியன் உதயம் ஆகும்.
அச்சமயத்தில் ஓசோன் படலமும், சூரிய ஒளியின் கதிர் இரண்டும் ஒன்று சேரும் சமயம் சிலையில் தாய் நீர் உருவாகும். இந்நீரே எல்லாவித கொடிய நோய்களை குணப்படுத்தவல்லது. இப்பெருமை கொண்ட சிலை ஆவுடையை ஆதாரபீடமாக கொண்டுள்ளது மிகச் சிறப்பு வாய்ந்தது.
இச்சிலை நவபாஷாண கட்டு என்பதால் ஒன்பது நவகிரகங்களை குறிக்கும் . ஆகவே இந்த ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகனை சுற்றி வரும் சமயம் நவகிரகங்களின் தோஷமும் விலகும் தன்மை உடையதாய் அமைகிறது. ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகன் செய்யும் அபிஷேக பொருட்கள் பால், சந்தானம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் மற்றும் பிரபஞ்ச காற்றும் மருத்துவ குணத்துடன் இருப்பது சிறிதும் ஐயமில்லை.
இத்திருக்கோயில் முகப்பில் நவசக்தி விநாயகர் மற்றும் வலதுபுறம் தட்ஷணாமூர்த்தி, வடபழனி சித்தர், வீரசி சாய்பாபா உள்ளனர். விநாயகரின் இடதுபுறத்தில் படியேறி சென்று ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகனையும் தரிசிக்கலாம். முருகனின் வாகனமான மயிலின் தோற்றமும் அதனூடே இரண்டு நாகங்கள் இருப்பதும் மிக விஷேசம். இந்த நவபாஷாண சிலை மக்களுக்காக இந்த ஆண்டு தைபூசம் (09 -02 -2017 ) அன்று சிறப்பாக கும்பாபிஷேகம் செய்யப்படுத்து. தொடர்ந்து மண்டல அபிஷேகங்களும் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல அபிஷேகங்களும் பூஜையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து மண்டல பூஜை 29 -03 -2017 அன்று நவகலச அபிஷேகங்களும், 108 சங்காபிஷேகம் மூல மந்தர ஹோமங்களும் சிறப்பாக நடைபெறுகிறது.
ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகன் இங்குவரும் மக்களின் தோஷங்களை நீக்கி சந்தோஷங்கள் அருள்ளிபாலிகிறார். மேலும் இத்தனை சிறப்பான இக்கோயில் ஸ்ரீ வடபழனி சித்தரின் நேரிடையான சீடர் கு.ரமேஷ் குமார் மக்களின் நலனுக்காக உருவாக்கி உள்ளார்.
மேலும் வார வியாழக்கிழமைகளில் மதியம் வடபழனி சித்தருக்கு பக்தர்களின் திருக்கரங்களால் பால் அபிஷேகம், செய்து பின் பூஜை செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
அச்சமயம் அபிஷேகப்பால் மற்றும் அபிஷேக மூலிகை தீர்த்தம் வழங்கப்படுகிறது. இதனை அருந்துவதால் நோய் எதிர்ப்பினை பெறுகிறோம்.
இங்கு குரு அருளுடன் திரு அருளும் சேர்ந்து நம் மன எண்ணங்கள் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களை செயல்படுத்தப்படுகிறது .

Navapashana LingaSri Somanatha Pasahana Lingeshwarar - Timiri, 8 Kms from Arcot

Ttimiri NAVAPASHANA SHIVALINGHAM Temple

Location
Thimiri is a small village located on the way from arcot to arani (approx 10 kms ) from arcot and and at thimiri ask for navapashana lingham temple,

History

There is an ancient Shiva temple "Pashana Lingeswarar" in Timiri, 8 Kms from Arcot (on the Arcot-Arni State Highway). The Shiva Lingam is very small and is made out of Nava Pashanams , by Kings that ruled Timiri. Fearing that the enemies might invade this place and damage this Lingam, the king , many 100s of years back, kept this Lingam in a tortoise shell, filled with water, and dropped the shell in a Pond in this temple premises.
In 1980s, this Lingam was found in and taken out from this temple's Pond, as per Olai Kurippu(Notes from saints via Palm Leaf) or Nadi Sashtram that was read in Tanjore.
This temple is maintained now very well by a dedicated old person (Mr.Radha Krishnan - Cell: 93447 30899) who was the king that protected this Lingam in his previous birth. This temple needs valuable support from the devotees, to construct a Hall, and to install few more deities (Muruga, Parvathy...etc).
The Lingam is always kept in Pure Mineral Water, and the Theertham from this temple cures all kinds of diseases, as these Nava Pashanams have high medicinal importance. There are lot of people that have got cured from incurable diseases by taking this
temple's miraculous Theertham by Lord Shiva's grace.

ஞான பூமியான தமிழகம் எத்தனயோ ஆன்மீக அற்புதங்களை கொண்டது. அப்படிப்பட்ட அற்புதங்களில் ஒன்றுதான் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி பாஷாண லிங்கம். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து அருள் பாலிக்கும் அரியதொரு தெய்வ சாட்சி, திமிரி ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர்.

திமிரி பாஷாண லிங்கம் உருவான வரலாறு தெரிய வேண்டுமா ? அதற்கு நாம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜய நகர பேரரசுக்கு செல்ல வேண்டும்.

விஜய நகர பேரரசில் சிற்றரசர்களாக திம்மி ரெட்டி , பொம்மி ரெட்டி இருவரும் வேலூர்க் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்களது வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார். இன்றைய திமிரி, அன்று திவாகராயர் எல்லை என்று பெயர் பெற்று விளங்கியது. ஒரு சமயம் தொற்றுநோய் விஷகிருமிகளால் மக்கள் நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இரக்க குணமும் இறைபற்றும் மிக்க சதாசிவராயர் இதனைகண்டு வேதனையுற்றார். பிணியும், வறுமையும் தன் நாட்டிலிருந்து நீங்க வேண்டும் என்று விரும்பிய அவர் , உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜவைத்தியரான இராச பண்டித சிரோன்ம்னி, மந்திர வைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தனரிடம் அதற்கான வழியை கண்டறிய ஆணையிட்டார்.


மன்னரின் அன்பான ஆணைப்படி அரசவை வைத்தியரும் 12 ஆண்டு காலம் உழைத்து, தன்வந்திரி வைத்திய முறையில் நவபாஷாணத்தில் ஒன்றான திமிரி பாஷாணத்தால் தெய்வாம்சமும் மருத்துவ குணமும் கலந்த சோமநாத ஈஸ்வர லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார். திமிரி என்பதற்கு தீ என்ற பொருளும் உண்டு.
அதன் உயரம் 6 அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1379 ஆம் ஆண்டு தைத் திங்கள் திருவாதிரை நன்னாளில் திமிரி நகரின் கோட்டைப் பகுதியல் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12வது பட்டம் சங்கராச்சாரியார் ஆசிர்வாதத்துடன் திமிரி பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம் பக்தர்களுக்கு அருள்விருந்தை வழங்கியது! அதன் மருத்துவ குணங்கள் மிகுந்த அபிஷேக தீர்த்தம் அருமருந்தாய் விளங்கியது!.

மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இந்த லிங்கத்தின் அபிஷேக தீர்த்த பிரசாதம் இதய நோய், சிறுநீரக நோய், மன நோய், சரும நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது. மருந்தும் ஈசனும் இணைத்து மருந்தீசராகி நோய் தீர்ப்பது அற்புதம்தானே! திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதல் புகையும் தன்மை கொண்டது ஆகையால் எப்போதும் லிங்கத்தின் மீது நீர் விழுமாறு செய்யப்பட்டது . அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டவர் நலமும் வளமும் பெற்றனர்.
அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது!.

மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சியடைந்தார். பக்திப் பரவசத்தில் நெகிழ்ந்தார்.

காலப்போக்கில் ஆற்காடு நவாப் படையெடுத்து வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றினான். புராதன சின்னங்களையும், ஆலயங்களையும் மொகலாயர் கொள்ளையிட்டனர். இந்த கொள்ளையிலிருந்து, தாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அருள்நிறை பாஷாண லிங்கத்தை காக்க கன்னிகா பரமேஸ்வரர் முற்பட்டார்.

லிங்கத்தின் மீது தேன் மெழுகு பூசி வேதியியல் கலவையிலான கூர்ம (ஆமை) வடிவ கவசத்துள் மறைத்து எக்காலத்தும் அழியாத வண்ணம் புவியியல் தத்துவத்தின்படி முக்கோண பெட்டகத்துள் வைத்து ஆலயத்து திருக்குளத்தில் கி பி 1454இல் புதைத்து வைத்தார். பிறகு, மாற்றாரிடம் பிடிபடுவதை தவிர்க்க, அண்டை அரசான காஞ்சிக்கு அரச வைத்தியர் தம் குழுவினருடன் விரைந்தார்.

இதை அறிந்த முகலாய சிப்பாய்கள் இவர்களை கைது செய்து திமிரியை அடுத்த ஆணைமல்லூர் ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயத்தின் முன்பு கொண்டு வந்தனர். அவர்களை யானைக்காலால் இடறச் செய்தனர். உயிர் நீங்கும் தருணத்திலும் கன்னிகா பரமேஸ்வரர், 'மற்றொரு பிறவி இருக்குமேயானால் அதிலும் என் கையாலேயே பாஷாண லிங்கத்தை மீண்டும் எடுத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்று அரனிடம் தியானித்துக் கொண்டார்.

பாஷாண லிங்கம் மறைந்து ஆண்டுகள் 500 ஓடி விட்டன. மனித குலத்தைக் காத்து அருள இறைவன் திருவுளம் கொண்டான் போலும். 1985 ஆம் ஆண்டு திமிரி கோட்டை பகுதியில் ஓர் ஐயப்பன் ஆலயம் அமைக்க ஏ.எஸ்.இராதாகிருஷ்ணன் என்ற அன்பர் முயற்சி செய்து வந்தார். பண வசதி இருந்தும் ஆலயம் முற்றுப் பெறாத நிலைமை. காரணத்தை அறிந்து கொள்ள வேலூர் சென்று திரு ஜெயஹரி என்பவரிடம் கந்தர் நாடி ஒலைச் சுவடியை பார்த்தார்.

கந்தர் நாடி ஒலைச் சுவடி காலக்கண்ணாடி போன்று லிங்கத்தை புதைத்த அரசவை மருத்துவரின் மறு பிறவியே அன்பர் திரு இராதாகிருஷ்ணன் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டிற்று. மற்றும் பாஷாண லிங்கம் புதைக்கப்பட்ட குளத்தின் விவரத்தையும் எடுக்க வேண்டிய வழிமுறைகளையும் தெளிவுபடுத்திற்று.

யானை காலால் மிதிபட்டு இறந்த அதே ஆனைமல்லூரில் திரு இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறப்பு அமைந்தது குறிப்பிடத்தக்கது. 500 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைப்பட்டிருந்த பாஷாண லிங்கத்திலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கவும் நாடி வழிகாட்டியது. அதன்படி குற்றாலம் ஸ்ரீசெண்பகாதேவி ஆலயம் அருகில் உள்ள புற்றில் முத்து ஒன்று காணக்கிடைக்கும் என்றும், அதை எடுத்து வெள்ளி மோதிரம் ஒன்றில் பதித்து அதை அணிந்து கொண்டு பிறகு லிங்கத்தை எடுத்தால், கதிர்வீச்சின் பாதிப்பு இருக்காது என்றும் சொன்னது. அவ்வாறே தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் திமிரி கோட்டை சோமநாத ஈஸ்வரர் ஆலயத் திருக்குளத்தில் 32 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த பாஷாண லிங்கத்தை தேடும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இம்முயற்சியில் அவரது ஆன்மிக நண்பர்களும் ஊர்ப் பொதுமக்களும் துணை நின்றனர்.

1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அந்த அதிசயம் நிகழ்ந்தது!. நம்பிக்கையுடன் பெருமுயற்சிகொண்டு தேடிய அன்பர் திரு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது தர்ம கர்ம யோகத்தால் பூர்வ ஜென்ம பலனாக சுமார் 600 ஆண்டுகளாக குளத்தில் புதையுண்டுகிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது!.

இச்செய்திகள் யாவும் திருவாவடுதுறை ஆதினம் ஸ்கந்தர் மணிமாலை சதகம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குளிர்ந்த நீர் நிரம்பிய கண்ணாடிப் பேழையில் ஸ்ரீபாஷாணலிங்கேஸ்வரர் அமர்த்தப் பெற்று ஓலைச்சுவடியில் தெரிவித்த வண்ணம் ஆத்மார்த்தமான பக்தியோடு அருளாளர் திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார்.

எத்தனை காலம் ஆனபோதிலும் ஆற்றல் குன்றாத சூரிய-சந்திரர்போல இந்த பாஷாண லிங்கேஸ்வரரின் பேராற்றல் தனித்தன்மையுடன் ஓங்கி நிற்கிறது. மருத்துவ முறைப்படியும், அகத்திய மகரிஷி அருளிய பட்டியல்படியும் சுத்தமான தண்ணீர், தேன், பால், விபூதி, சந்தனம் ஆகியவற்றை பாஷாண லிங்கத்தின் மீது சார்த்தி, அவற்றை முறையாக அருந்தி வர சரும, நரம்பு நோய்களும், ரத்த அழுத்தமும் தீர்கின்றன.

எல்லையில்லா பெருங்கருணை கொண்ட உலகநாயகனான அந்த வைத்திய நாதப்பெருமான் மனித குலத்தின் மீது கொண்ட அளவற்ற அன்பினால் இந்த கலியுகத்தில் திமிரியில் அமர்ந்து பிணி தீர்க்கும் பெரும்பணியைச் செய்து வருகிறார். நோயுற்ற அன்பர்கள் திமிரி இறைவனை ஒரு முறை தரிசனம் செய்து தீர்த்த பிரசாதத்தை அருந்தி வந்தால் நோய்கள் நீங்கி வாழ்வில் வளமும் நலமும் சேரும் என்பது திண்ணம். 

திருச்சிற்றம்பலம்.

குறிப்பு : ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ சோமநாத  பாஷாண லிங்கேஸ்வரருக்கு அபிஷேக  ஆராதனைகள்  வெகு சிறப்பாக  நடைபெற்று  கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு :

திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள்,
அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திமிரி - 632512.
ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம்.
அலைபேசி எண் : 93447 30899.

Sri Somanadha Paashaana Lingeswarar Temple - Timiri  https://www.facebook.com/paashaanalingeswarar.timiri

Navapashana Adhi Thiruvarangam - Manalurpettai, near Kucchi Palayam, between Thiruvannamalai and Thirukovilur

Location:
Adhi Tiruvarangam is small village in bank of Pennai River in Villupuram Dist, Tamil Nadu.
It’s 51 KM far from Villupuram Bus Stand which is there in NH 45. Tamil Nadu.
It’s 30 KM far from Thiruvannamalai, Tamil Nadu.
From Tirukoilur - On Tiruvannamalai Road, there is a village "Kucchi Palayam", from here take divension to reach "Manalurpettai". You can find a direction board on the Thiruvannamali mainroad to reach the temple. Local villagers can guide if your get struck.  From Tiruvannamalai - Reach Manalurpettai. Local villagers can guide if your get struck.  After reaching Manalurpettai, ask for "Tiruvarangam" temple. Local villagers will guide very well. (99% Tamil speaking people only). On the way to Sithamoor junction, you will cross bridge which is constructed on the Pennai River.  Immediately crossing the bring take right side village road. You can see the direction board.  This Road will take you the Mandapa of the temple. From the Mandapa, take right side which will taken you to the temple entrance.

Temple Open Time: 6:00AM to 8:00PM. No Breaks.

Best Time To Visit: Non-festival days.

History of Tiruvarangam
One of the oldest temples for Lord Ranganatha dating back to Kretha Yugam.
Gigantic Ranganatha is bigger than the Lord at Srirangam, Tamilnadu & Srirangapatna in Karnataka

This temple dates back to the first Yugam (Kretha Yugam) and the first Avathaaram (Matsya Avathaaram). Hence, this Kshetram is referred to as ‘Adhi’ Rangam.

Lord Ranganatha is seen in a gigantic east facing sleeping posture and measures over 15 feet, not seen in any other Divya Desam.  It is not not made up of stone or wood.No abishekam for this statue, special oil will be applied once in a year.It is bigger than trichy Shri ranganathan temple.

Reference to this temple is found in Skaantha Puranam Uthara Kaandam - 301-306 athyayam under Uthara Ranga Mahatmiyam. 

There are three stories that describe the significance of this temple.

1. The Devas, who lost the Vedic scriptures after being defeated by Asura Shomugan, approached Brahmma who in turn sought the help of Lord Narayana.

Finding out the hide-out of the Asura under the sea, Lord Narayana took the form of Matsya and defeated the Asura and handed back the Vedic scriptures to Brahmma. Lord Narayana retrived the Indraloka from Asuras and handed over to Devas. After completing this activity Narayana took at this place. It is believed that the Lord initiated the Vedic lessons to Brahmma in this Kshetram. One sees the Lord with his left thumb folded towards his fingers in a posture indicating this.

Acceding to the prayers of the Devas, Lord Narayana is said to have directed his sculptor Vishwakarma to create an image of his similar to the one in Thiru Paarkadal.

2. In Kretha Yugam, a king by name Suratha Keerthi lived a prosperous life but he had one unfulfilled wish. He did not have a child. As suggested by Sage Narada, he came, with his wife, to the place where Lord Ranganatha was sleeping under Adhiseshan and undertook penance. Answering his prayers, he was blessed with four children.

3. Chandran, who showed love to only one of his 27 wives, was cursed by his other wives to lose his handsome looks. He came to Uthara Rangam, undertook penance in the temple tank to the South East of the temple and was liberated from his curse. Hence, the pushkarni here is called Chandran Pushkarani.

The sanctum…
The Sriranganatha is in sanyam position on top of adisheshan with sridevi in left hand shoulder side and the Poodevi holding the left foot of Ranganatha in her laps and the right foot is on the body of adisesha. Ranganatha is smiling posture and keeping his right hand to head and teaching the Vedhas to Bramma with his left hand. Garuda alwar is waiting near to right hand to do order from Ranganatha.
Temple History Explained by the Priest in Tamil:
https://www.youtube.com/watch?v=ErpNHB8XnIY

நவபாஷாண லட்சுமி நாராயணர்- காரிசேரி விருதுநகர், சிவகாசி அருகே உள்ளது

நவபாஷாண பெருமாள் விருதுநகர், சிவகாசி அருகே உள்ள காரிசேரி லட்சுமி நாராயணர் கோவிலில் நவபாஷாணத்தில் அமைந்த பெருமாள் உள்ளார். 28 நாட்கள் விரதம் இருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்க வேண்டியதெல்லாம் நிறைவேறும் என்பதும், பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் நீங்குவதும் இக்கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது.
கரை ஒதுங்கிய பெருமாள் சதுரகிரி மலையிலுள்ள மகாலிங்க சுவாமி கோவிலில் இருந்த சித்தர்கள் நவபாஷாணத்தால் ஸ்ரீ லட்சுமி நாராயணர் சிலையைச் செய்து வழிபட்டு வந்தனர். மலையில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில், இந்த சிலை நீரில் அடித்துவரப்பட்டு காரிசேரியில் கரை ஒதுங்கியது. இதனை மீட்ட மக்கள், அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோவில் கட்டியுள்ளனர். திருவிழா பெருமாளுக்கு உகந்த நாளான வைகுண்ட ஏகாதசியன்று பிற பகுதிகளில் நடைபெறுவதைப் போலவே இங்கும் பெரிய அளவில் திருவிழா நடத்தப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பைக் காண பல ஆயிரம் பேர் கூடுவது வழக்கம்.
வழிபாடு நம்மவர்கள் சிலர் விரதம் இருப்பது என்றால் ஒரு வாரம் அல்லது ஒரு மண்டலம் என இருப்பார்கள். ஆனால், இந்த லட்சுமி நாராயணரை வேண்டி விரதம் இருப்போர் மார்கழி மாதத்தில் திருவோண நட்சத்திற்கு முன்பு 28 நாட்கள் விரதம் இருந்து பின் லட்சுமி நாராயணரை வணங்குகின்றனர். நேர்த்திக்கடன் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து துளசி நீரால் அர்ச்சனை செய்கின்றனர். இந்த தீர்த்த நீரை குழந்தையின்றி தவிக்கும் தம்பதியர் அருந்துவர குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது தொன்நம்பிக்கை. அவ்வாறு மகப்பேரு அடைந்தவுடன் மீண்டும் மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
தலசிறப்பு இங்கு மூலவராக வீற்றிருக்கும் பெருமாளின் சிலை நவபாஷாண சிலை என்பது சிறப்பு. இக்கோவில் மிகச் சிறிய கோலாக இருந்தாலும் நவபாஷாணத்தால் வடிவைமைக்கப்பட்ட பெருமாள் சிலை உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயமாகும். சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. எப்படி செல்லலாம்? சென்னையில் இருந்து சிவகாசி 540 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு, திண்டிவனம், திருச்சி, மதுரை வழியாக சிவகாசியை வந்தடையலாம். செங்கோட்டை எக்ஸ்பிரஸ், பொதுகை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகள் சென்னையில் இருந்து சிவகாசி செல்ல உள்ளது

Chettinadu Villages Venba

The Nagarathars(Chettiyaars) live in 76 villages in Tamil Nadu. 'Venpa' is sung about the Chettinad areas where they live. The Nagar...